மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

"புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும்'

தேவகோட்டை, ஜன. 8: புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் துறை இயக்குநர் கதிரேசன் தெரிவித்தார். தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தேவகோட்டை, ஜன. 8: புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் துறை இயக்குநர் கதிரேசன் தெரிவித்தார்.

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் மேளாவில், விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்  

அவர் பேசியது:

விவசாயிகள் வேளான் அறிவியல் நிலையத்திற்கு சென்று, தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் லாபகரமாக  விவசாயம் செய்ய இயலும்.

விவசாயம் என்றால் வழக்கமான நெல் பயிரிடுவது என்பதை மட்டும் செய்யாமல், மற்ற பணப் பயிர்களையும் இங்குள்ள மண் வளத்திற்கு ஏற்ப சாகுபடி செய்ய முன்வர வேண்டும். மீன் வளர்ப்புக்கேற்ற சூழல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கோழிகளுக்கு கழிச்சல் நோய் வராமல் தடுக்க, தற்போது தீவனத்துடன் மருந்தை அளிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இதை தெரிந்துகொண்டு கோழி வளர்ப்பில் ஈடுபடலாம்.

கல்லூரி, பள்ளிகளில் இதுமாதிரி கருத்தரங்குகள் அடிக்கடி நடத்தப்படவேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் அருகில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று கிராமங்களை தத்தெடுத்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.