காரைக்குடி தீயணைப்பு அலுவலகத்துக்கு கட்டட வசதி செய்து தரப்படுமா?

காரைக்குடி, ஜன. 19:÷மிகவும் பழமையான ஓட்டுக் கட்டடத்தில் இயங்கிவரும் காரைக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு நகரின் மையப் பகுதியில் புதிய அலுவலகக் கட்டடம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை
Updated on
1 min read

காரைக்குடி, ஜன. 19:÷மிகவும் பழமையான ஓட்டுக் கட்டடத்தில் இயங்கிவரும் காரைக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு நகரின் மையப் பகுதியில் புதிய அலுவலகக் கட்டடம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

÷சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம், மத்திய மின் வேதியியல் அறிவியல் ஆய்வகம், செட்டி நாடு பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. மேலும் புதுவயல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 3 காகித ஆலைகள், நூற்பாலைகள் உள்ளன. இப்பகுதியில் தீ விபத்து ஏற்ட்டால் காரைக்குடி தீயணைப்பு நிலையத்தினரை அணுகுகின்றனர்.

÷இந்த தீயணைப்பு நிலையத்தில், 2007-ல் 71 தீ விபத்துகள், 11 போக்குவரத்து விபத்துகள் என மொத்தம் 82 மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, 2008-ல் 43 தீ விபத்துகளும், 100 மீட்புப் பணிகளும், 2009-ல் 71 தீ விபத்துகளும், 90 மீட்புப் பணிகளும், 2010-ல் 72 தீ விபத்துகளும், 66 மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.÷ஆனால், காரைக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. சிறிய அளவிலான ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாத, இக் கட்டடத்தைப் பயன்படுத்துவதற்காக நகராட்சிக்கு ரூ. 102 வாடகை செலுத்தப்படுகிறது. 1948-ல் கட்டப்பட்ட பழமையான இக் கட்டடத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி மற்றும் வீரர்கள் சிரமத்துடன் பணிபுரிகின்றனர்.

÷இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி எம். மகாலிங்கமூர்த்தி கூறியதாவது:÷தீயணைப்பு நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் அமைப்பதற்காக காரைக்குடி அருகே பேயன்பட்டியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ÷ஆனால் நகரின் மையப் பகுதியில் தீயணைப்பு நிலையத்தை அமைத்தால்தான் உரிய இடங்களுக்கு விரைவாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். ÷தீயணைப்பு வீரர்கள், அலுவலர்களுக்கு அரசு குடியிருப்பும் இல்லை.

தற்போது ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டிருக்கிறது. வாகன விபத்தில் சிக்கிக் கொள்பவர்களை மீட்க நவீன கட்டர் மிஷின் வசதியை கேட்டுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com