இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

மதுரை நகரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

Updated On :12 மே 2013, 5:58 am IST

மதுரை நகரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

   மதுரை திலகர்திடல் மற்றும் கரிமேடு பகுதிகளில் கும்பல் ஒன்று செல்போனை குறிவைத்து திருடி வந்ததாக புகார்கள் எழுந்தன. தனியாகச் செல்வோரை வழிமறிக்கும் அக்கும்பல், செல்போனை மட்டுமே பறிப்பதை வழக்கமாகவும் கொண்டிருந்தது.

  இது தொடர்பாக விசாரித்து குற்றவாளிகளைப் பிடிக்க, மாநகர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா ஆலோசனை அடிப்படையில், தனிப்படையினர் 4 பேரைக் கைது செய்தனர்.

  சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த கருத்தபாண்டி (24), மாயக்கண்ணன் (24), பாலமுருகன் (24) ஆகியோர் செல்போன் திருடிய கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறினர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 3 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

 அதேபோன்று, கீரைத்துறையைச் சேர்ந்த செல்வம் என்ற பொணந்தின்னி செல்வம் (16) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மேலும், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைத் திருடிவந்ததும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து, மொத்தம் 6 சைக்கிள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

  இதுதவிர, சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை தீவிர விசாரணைக்கு உள்படுத்தி, பொருள்களை மீட்டுள்ளதாகவும், போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.