மதுரையில் மூதாட்டியிடம் 9 பவுன் நகையை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
மதுரை மேற்கு கே.கே.நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சபாபதி. கூட்டுறவுத் துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி அழகம்மை (73). இவர், கே.கே.நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்புள்ள கடைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்றுள்ளார்.
பின்னர், கடையிலிருந்து அவர் வீட்டுக்குத் திரும்பி நடந்து சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இருவர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர், அழகம்மை அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றனர்.
பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளின் மதிப்பு 9 பவுன் என போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, அழகம்மை அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட ஆளுநர் மறுப்பா?

நீட் விவகாரம்: பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள்!

தமிழ்நாட்டில் கூட்டணியாட்சி! அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


