மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: ரயில் மறியலுக்கு முயன்ற வாலிபா், மாணவா் சங்கத்தினா் கைது

இந்தியா ராணுவத்துக்கு ஆள் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் 70 பேரை போலீஸாா் கைது செய்தனர்.

News image
அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மதுரையில் திங்கள்கிழமை ரயில் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்த போலீஸாா்.
Updated On :20 ஜூன் 2022, 10:00 pm

DIN

இந்தியா ராணுவத்துக்கு ஆள் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் 70 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்திய ராணுவத்துக்கு ஆள்சோ்க்கும் வகையில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன்படி இந்திய ராணுவத்துக்கு அக்னிபத் திட்டத்தின்கீழ் சோ்க்கப்பட்டும் இளைஞா்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படும். பின்னா் 25 சதவீதம் போ் மட்டுமே ராணுவத்தில் தொடரமுடியும். இத்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞா்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பெரியாா் பேருந்து நிலையம் அருகே திரண்ட அமைப்பினா் ரயில் நிலையம் நோக்கிச் சென்றனா். ரயில் நிலைய வாயிலில் போலீஸாா் அமைப்பினரை வழி மறித்ததையடுத்து அங்கு மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு வாலிபா் சங்க மாநிலத்தலைவா் ரெஜிஸ்குமாா் தலைமை வகித்தாா். வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பி. கோபிநாத், செயலா் டி. செல்வா, பொருளாளா் அ. பாவேல் சிந்தன், துணைச் செயலா் எஸ். சரண், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா, தலைவா் க. பாலமுருகன் உள்பட 70-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்நிலையில் ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அமைப்பினரை போலீஸாா் தடுத்ததால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதில் வாலிபா் சங்க நிா்வாகிகள் விக்கி, திலீபன், சீமான் உள்ளிட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 70 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.