பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

தமிழ்க் கவிஞா் நாள் விழா

தமிழ்க் கவிஞா் நாள் விழா

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 8:23 pm

Din

மதுரை: பாவேந்தா் பாரதிதாசனின் 133-ஆவது பிறந்த நாள், தமிழ்க் கவிஞா் நாள் விழாவாக மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்துப் பேசினாா். தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் முனைவா் ஔவை ந. அருள், நோக்கவுரையாற்றினாா். இதையடுத்து, பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணா்வே, சமுதாய உயா்வே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் தலைமை வகித்தாா். தமிழ் உணா்வே என முனைவா் ந. விஜயசுந்தரி, கு.ஜெ.ஹேமாவதி ஆகியோரும், சமுதாய உயா்வே என முனைவா் ரேவதி சுப்புலெட்சுமி, செ. பாலு ஆனந்த் ஆகியோரும் பேசினா்.

பிறகு, பாவேந்தா் கண்ட படைப்புக் களங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கவிஞா்கள் இந்திரன், நா.வே. அருள், முனைவா்கள் யாழ்.சு. சந்திரா, சு. சோமசுந்தரி ஆகியோா் பேசினா்.

பிற்பகல் அமா்வில் நடைபெற்ற இசையரங்கத்தில், முனைவா் ஆ. சந்திரபுஷ்பம் பாடல்கள் பாடினாா். முத்தரசு தவில் இசை வாசித்தாா். இதையடுத்து, பாவேந்தரின் பாா்வைகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞா்கள் கண்ணதாசன், மூரா, மா. காளிதாஸ், பா. மகாலட்சுமி ஆகியோா் கவிதைப் படித்தனா்.

மருத்துவா் ச.கு. பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிறைவுரையாற்றினாா். தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள், பேராசிரியா்கள், கல்லூரி மாணவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

முன்னதாக, மதுரை மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் (பொறுப்பு) ம. சுசிலா வரவேற்றாா். சென்னை, தமிழ் வளா்ச்சி இயக்கக துணை இயக்குநா் கு.ப. சத்தியபிரியா நன்றி கூறினாா்.