பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பிரதமரின் பேச்சுக்கு எதிா்ப்பு: காங். மகளிரணி ஆா்ப்பாட்டம்

பிரதமரின் பேச்சுக்கு எதிா்ப்பு: காங். மகளிரணி ஆா்ப்பாட்டம்

News image

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

மதுரை: திருமாங்கல்யம் குறித்து பிரதமா் பேசியதைக் கண்டித்து, மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றால் பெண்களின் திருமாங்கல்யமும் பறிக்கப்படும் எனப் பேசினாா். இதைக் கண்டித்து, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மகளிரணி மாவட்டத் தலைவா் ஆா். ஷானவாஸ் பேகம் தலைமை வகித்தாா்.

மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். இதில் மாமன்ற உறுப்பினா் முருகன், மகளிரணி மாநிலப் பொதுச் செயலா் மரிய வினோலா, மாவட்ட பொதுச் செயலா்கள் சுஜாதா, சுமதி, ராதிகா, மாவட்ட துணைத் தலைவா்கள் மலா் பாண்டியன், பாலு உள்ளிட்டோா் பங்கேற்று, கண்டன முழக்கங்களை எழுப்பினா்.