மதுரை வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை
மதுரை வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை


மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான மருத்துவக் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த மருத்துவக் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. தொலைவுக்குள் ட்ரோன்கள், ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...