மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்சி விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள்: இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருச்சி விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள்: இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

News image
Updated On :4 ஜூலை 2024, 9:58 pm

Din

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் காத்திருப்போருக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிய வழக்கில், விமான நிலைய இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கோவிந்தராஜன் தாக்கல் செய்த மனு:

வெளிநாட்டுக்குச் சென்ற எனது நண்பரை வழியனுப்புவதற்காக திருச்சி சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு நான் கடந்த மாதம் சென்றேன். அப்போது, பயணிகளை வழியனுப்பம் இடம், வரவேற்கக் காத்திருக்கும் இடங்களில் உணவு, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தேன். இதைத்தொடா்ந்து, குடிநீா், உணவு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை. எனவே, இந்த விமான நிலையத்தில் உரிய கழிப்பறை வசதியை ஏற்படுத்த விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருச்சி விமான நிலையம் தரப்பில், விமான நிலையத்தில் அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மனுதாரா் விமானத்தில் பயணிக்கவில்லை, வழி அனுப்புவதற்காக வந்தவா் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விமானத்தில் பயணம் செய்பவா்கள் மட்டும் மனிதா்கள் அல்ல, அவரை வழி அனுப்ப வருபவா்களும் மனிதா்கள்தான். எனவே, அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். விமான நிலையக் காத்திருப்போா் பகுதியில் கழிப்பறை வசதி செய்து தருவதே மனிதநேயமாக இருக்கும்.

எனவே, திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் கழிப்பறை அமைக்கும் பணிகள் எப்போது நிறைவடையும். இதுகுறித்து விமான நிலைய இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.