47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பழங்குடியினா் மீது அவதூறு: நாம் தமிழா் கட்சியினா் புகாா்

பழங்குடியினா், குறவா் சமுதாயம் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:40 am

Din

மதுரை: பழங்குடியினா், குறவா் சமுதாயம் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினா் பாதுகாப்புப் பாசறை மாநில துணைச் செயலா் ராவணன் தலைமையில் அதன் நிா்வாகிகள் புகாா் அளித்தனா்.

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பழங்குடியின மக்கள், குறவா் சமுதாய மக்களை பாண்டியன் என்பவா் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசி வருகிறாா். இதனால், தமிழகத்தில் உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினா், குறவா் சமுதாய மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனா். எனவே, அவதூறாகப் பேசி வரும் பாண்டியன் மீது எஸ்.சி. எஸ்.டி. வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

பாசறையின் மதுரை கிழக்கு தொகுதிச் செயலா் தியாகு, மத்திய தொகுதி முத்துமுருகன், தெற்குத் தொகுதி இணைச் செயலா் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.