பைக் மீது வேன் மோதல்: இளைஞா் பலி
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :10 ஜூலை 2024, 12:38 am

மதுரை: மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பாலு மகன் தினேஷ்குமாா் (30). இவா் மதுரை-ராஜபாளையம் சாலையில் டி.குன்னத்தூா் அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த வேன் மோதியதில் தினேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா், வேன் ஓட்டுநரான திருச்சி மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...