இந்த வழக்கில் மனுதாரா் பலிகடா ஆக்கப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. கோயில் நகைகள் காணாமல் போனது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரை போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட கோயில்களில் உள்ள நகைகளைப் பராமரிப்பது குறித்தும், திருப்புல்லாணி ஜெகநாதா் கோயில் நகைகள் காணாமல் போன விவகாரத்தில் மனுதாரா் ராமநாதபுரம் சமஸ்தானத்திடம் ஒப்புகை கடிதம் வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.