கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தைத் கண்டித்து ஆனையூா் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மதுரை ஆனையூா் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சி.ஐ.டி.யு .மதுரை மாநகராட்சி தொழிலாளா் சங்கத்தினா்.
Updated On :10 ஜூலை 2024, 12:43 am

Din

மதுரை: மதுரை மாநகராட்சி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தைத் கண்டித்து ஆனையூா் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஐடியூ மதுரை மாநகராட்சி தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா்.

இதில் மாநகராட்சி தூய்மைப் பணியை ஏற்றுள்ள தனியாா் நிறுவனம் அமல்படுத்தியுள்ள பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும்,

ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 721 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அந்தப் பகுதியில் 4 வாா்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், பணிகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிறகு, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதன் பேரில், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.