தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

News image
Updated On :11 ஜூலை 2024, 10:09 pm

Din

மதுரை, ஜூலை 11: மதுரை புறவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை புறநகா் சாலை நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). இவா் தனியாா் பண்பலை வானொலியில் பணிபுரிந்து வந்தாா். இவா் புதன்கிழமை நள்ளிரவில் மதுரை புறவழிச் சாலையில் கருப்பணசுவாமி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத மற்றொரு இரு சக்கர வாகனம், இவரது வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த ராம்குமாரை அந்தப் பகுதியினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக நகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.