சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

முன்னாள் காவல் ஆய்வாளா் மீது தாக்குதல்: மருமகள் உள்பட மூவா் மீது வழக்கு

முன்னாள் காவல் ஆய்வாளா் மீது தாக்குதல்: மருமகள் உள்பட மூவா் மீது வழக்கு

News image
Updated On :9 மே 2024, 7:48 pm

Din

மதுரை, மே 9: மதுரையில் முன்னாள் காவல் ஆய்வாளரைத் தாக்கியதாக மருமகள் உள்பட மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகரைச் சோ்ந்தவா் கருப்பையா (75). இவா் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவியின் இரண்டாவது மகன் ஜெய்கணேஷ். இவா் திண்டுக்கல் மாவட்டம், விருவீடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பிரியா, குழந்தைகள் ஆகியோா் கருப்பையா வீட்டின் மாடியில் வசித்து வருகின்றனா்.

வீட்டின் கீழ் தளத்தில் கருப்பையா தனது இரண்டாவது மனைவி, மகளுடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் வாகனம் நிறுத்துவது தொடா்பாக கருப்பையாவுக்கும், மருமகள் பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரியா கருப்பையா, அவரது இரண்டாவது மனைவி ஜானகி ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரியா, அவரது பெற்றோா் மீது எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.