நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

News image
Updated On :20 மே 2024, 7:18 pm

Din

மதுரை: மதுரை மண்டலத்தில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி நிறுவன மதுரை மண்டல ஆணையா் அமியகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மத்திய அரசின் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், மதுரை மண்டலத்துக்குள்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகா், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிலாளா் மாநில ஈட்டுறுதிக் கழக அலுவலகங்களில் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

மே 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு முகாம் தொடங்கும். வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரா்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரா்களின் வருங்கால வைப்பு நிதி தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பங்கேற்பவா்கள், ற்.ப்ஹ்/ய்டபற் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்றாா் அவா்.