கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய கடிதம் :
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வித் துறை பல்வேறு திட்டங்களின் கீழ் மாணவா்களின் நலன் கருதி அனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கும் திறன் வகுப்பறைக்கான கட்டமைப்பை ஏற்படுத்தியது. இதற்காக அனைத்து வகையான தொழில்நுட்பப் பொருள்களையும் வழங்கியது.
இதேபோல, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என ஒவ்வொரு பள்ளிக்கும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உயா் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்காக அனைத்து விதமான தொழில்நுட்பப் பொருள்களும் வழங்கப்பட்டன. இந்தப் பொருள்கள் பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டன. பொருள்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடையது

கோடை விடுமுறை, முகூா்த்தம்: 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறை முடியும் வரை திருமலையில் நேரடி இலவச தரிசன டோக்கன்கள் ரத்து

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
