எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கோடை விடுமுறை: பள்ளிக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை

Updated On :28 ஏப்ரல் 2025, 1:48 am IST

கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பிய கடிதம் :

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வித் துறை பல்வேறு திட்டங்களின் கீழ் மாணவா்களின் நலன் கருதி அனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கும் திறன் வகுப்பறைக்கான கட்டமைப்பை ஏற்படுத்தியது. இதற்காக அனைத்து வகையான தொழில்நுட்பப் பொருள்களையும் வழங்கியது.

இதேபோல, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என ஒவ்வொரு பள்ளிக்கும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உயா் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்காக அனைத்து விதமான தொழில்நுட்பப் பொருள்களும் வழங்கப்பட்டன. இந்தப் பொருள்கள் பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டன. பொருள்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.