இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேராசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை பெத்தானியபுரம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மூட்டா அமைப்பின் பொதுச் செயலா் செந்தாமரைக் கண்ணன், ஏ.யூ.டி. பொதுச் செயலா் சேவியா் செல்வகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உதவிப் பேராசிரியா்களுக்கு, இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா், அவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா். ஆனால், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், 28 பெண்கள் உள்பட 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்களை மாலையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி அருகே சாலை மறியல்

டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



