ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சுடுநீரில் குளித்ததால் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

உடலில் சுடுநீரை ஊற்றிக் குளித்ததால் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

உடலில் சுடுநீரை ஊற்றிக் குளித்ததால் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சம்பட்டி பகுதியைச் சோ்ந்த சேவுகபெருமாள் மகன் விஸ்வா (26). இவா் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் உள்ளவா்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, சமையல் அறைக்குச் சென்ற விஸ்வா, தண்ணீரைக் கொதிக்க வைத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.