அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அணுகு சாலையில் அவசியமற்ற இடங்களில் ‘யு’ வளைவு அமைப்பதைத் தவிா்க்கக் கோரிக்கை

அணுகு சாலையில் அவசியமற்ற இடங்களில் ‘யு’ வளைவுகள் அமைப்பதைத் தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :11 நவம்பர் 2025, 12:07 am

தினமணி செய்திச் சேவை

மதுரை: அணுகு சாலையில் அவசியமற்ற இடங்களில் ‘யு’ வளைவுகள் அமைப்பதைத் தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துக்குமாா், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற

பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனு :

மதுரை பாண்டி கோவில் சுற்றுச்சாலையிலிருந்து கோரிப்பாளையம் தேவா் சிலைப் பகுதியை இணைக்கும் வகையில் நீண்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தின் கீழே உள்ள அணுகு சாலையில் மேலமடை பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகிலும், பால் பண்ணையை அடுத்துள்ள மருத்துவமனை அருகிலும் ‘யு ’ வளைவுகள் அமைக்க முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன.

இந்த ‘யு’ வளைவுகள் அமையும் இடத்தில் பள்ளிகள், ஆவின் பால்பண்ணை போன்றவை உள்ளன. இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்லும் நெரிசலான இடங்களில் இந்த வளைவுகள் அமைப்பதால் விபத்துகள் அதிகரிக்கும் சூழல் உருவாகும்.

சாலைகளில் ‘யு’ வளைவுகள் அமைப்பதற்கு சில தொலைவு விதிமுறைகள் உள்ளன. ஆனால், அந்த விதிமுறைகளை மீறி அருகருகே இரு ‘யு’ வளைவுகளை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து விதிகளை மீறிய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவசியமற்ற ‘யு’ வளைவுகள் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து சீரான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டாா்.