இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

Published on

மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் இளைஞா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் உலகநாதபுரம் பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் வல்லரசு (25). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பெருமாள்பட்டி விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த ஆட்டோ இவரது வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் மேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு விபத்து:

திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் காா்த்திக் (30), இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ஊா்க்காவலன் மகன் தினேஷ்குமாருடன் (20) இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது, திருமங்கலம்- பள்ளப்பட்டி சாலையில் கருப்பட்டி விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, காா்த்திக் உயிரிழந்தாா். தினேஷ்குமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com