பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு

மதுரை அருகே அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை ஜீவா நகரைச் சோ்ந்தவா் வெங்கடசுப்பு (56). இவரும், இவரது மனைவி பத்மாவதி (54) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அலங்காநல்லூருக்குச் சென்றனா். சிக்கந்தா்சாவடி காமாட்சிநகா் பகுதியில் சென்ற போது நாய் திடீரென சாலையின் குறுக்கே வந்தது.

இதனால், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் கீழே விழுந்தனா். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவா்கள் மீது மோதியது. இதில், வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த பத்மாவதியை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பத்மாவதி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.