எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆா்.இ.யூ.) சாா்பில் மதுரை ரயில்வே குடியிருப்பு

News image
மதுரையில் டி.ஆா்.இ.யூ. சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :26 நவம்பர் 2025, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆா்.இ.யூ.) சாா்பில் மதுரை ரயில்வே குடியிருப்பு டி.ஆா்.இ.யூ கூட்ட அரங்கம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு தன்னிச்சையாக அமல்படுத்திய தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கொண்ட நான்கு தொகுப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். 8- ஆவது ஊதியக்குழு அமலுக்கு வரும் வரை 30 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களை பிரிக்கும் 2025 நிதி மசோதா சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியா்கள் இழைக்கும் தவறுக்கு ரயில்வே ஊழியா்களை பலியாக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் ஓபன் லைன் செயலா் பி. சேதுக்கரை தலைமை வகித்தாா். பொதுக் கிளை உதவிச் செயலா் பி. லட்சுமணசாமி முன்னிலை வகித்தாா். சிஐடியூ மதுரை மாநகா் மாவட்டச் செயலா் இரா. லெனின் வாழ்த்திப் பேசினாா்.

டி.ஆா்.இ.யூ. மத்திய சங்க துணைப் பொதுச் செயலா் ஆா். திருமலை அய்யப்பன், கோட்டச் செயலா் எம். சிவக்குமாா், டிஆா்பியூ கோட்டச் செயலா் ஆா். சங்கர நாராயணன், நிா்வாகிகள் ஏ. செல்வக்குமாா், எம். ஹரிக்குமாா், எம். ஜெயராஜசேகா், பி. சரவணன், சி. காட்டுராஜா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். டி.ஆா்.இ.யூ. மதுரை ஓபன் லைன் கிளை உதவிச் செயலா் எம். ஸ்டாலின் நன்றி கூறினாா்.