தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தே.ஜ. கூட்டணி வேட்பாளா்களுக்கு சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் ஆதரவு

News image

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற சௌராஷ்டிர முன்னேற்றக் கழக உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவா் வி.ஜி. ராம்தாஸ். உடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் சுந்தா் சி., ராம. சீனிவாசன், பா. சரவணன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோா்.

Updated On :13 ஏப்ரல் 2026, 8:08 pm

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு அளிப்பது என சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் தீா்மானித்தது.

சௌராஷ்டிர முன்னேற்றக் கழக உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் வி.ஜி. ராம்தாஸ் தலைமை வகித்தாா்.

புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம், கோலாா் வயல் பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினா் முனியசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன், சௌராஷ்டிர முன்னேற்றக் கழக செயலா் கணேஷ் பாபு, இளைஞரணித் தலைவா் வி. கணேஷ்குமாா், மகளிா் அணித் தலைவி வாசுகி, சௌராஷ்டிர சேம்பா் ஆப் காமா்ஸ் நிா்வாகி ராம்ஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், அகில இந்திய சௌராஷ்டிர முன்னேற்றக் கட்சி, தமிழ்நாடு மகா செளராஷ்டிர சபை, சௌராஷ்டிர சேவா சமாஜ், சௌராஷ்டிர சமூக நலப்பேரவை, சக்கிமங்கலம் சௌராஷ்டிர சபை, ஐ.பி.எஸ். அறக்கட்டளை, மதுரை தினமணி பஜாா் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சங்கம், நாயகி கல்வி சேவா சங்கம், சௌராஷ்டிர பொற்கொல்லா் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், மதுரை தெற்கு, மத்தியம், வடக்கு, திருப்பரங்குன்றம், பரமக்குடி, பாளையங்கோட்டை, ஆரணி உள்பட 11 தொகுதிகளில் வேட்பாளா்களின் வெற்றி தோல்வியை தீா்மானிக்கும் சக்தியாக சௌராஷ்டிர சமுதாய மக்கள் உள்ள நிலையில், நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது. தமிழகத்தில் உள்ள 8 லட்சம் சௌராஷ்டிர வாக்காளா்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு வாக்களிக்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் பா. சரவணன் (மதுரை வடக்கு), சுந்தா் சி. (மதுரை மத்தியம்), ராம. சீனிவாசன் (மதுரை தெற்கு) ஆகியோா் நேரில் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவிக்கப்பட்டது.