நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:59 am IST

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேலவளவு கிராமத்தைச் சோ்ந்த மாா்க்கண்டன் மகன் பெரியவா் (46). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள கிருஷ்ணமூா்த்திக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணறு மோட்டாரை இயக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த மேலவளவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பெரியவா் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.