மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ளது. அழகா்கோவில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருள்வது வழக்கம். இந்த நிகழ்வுகளில் நிலவும் ஜாதிய அடையாளங்களை நீக்கி, சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
மனுதாரா் கடைசி நேரத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மண்டகப் படிகள் , பரம்பரை வழியாகவா அல்லது ஜாதி அடிப்படையில் அளிக்கப்படுகிா?. மண்டகப்படி அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகள் ஏதும் உள்ளதா?.
கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவில், அவா் எத்தனை மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறாா். அதன் விவரங்களை இந்து சமய அறநிலையத் துறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

புதுக்கோட்டை இளைஞா் மா்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு

மதுரையில் நாளை வைகையாற்றில் எழுந்தருளுகிறாா் அழகா்

சித்திரைத் திருவிழா: கள்ளழகரை வரவேற்கத் தயாராகும் பக்தா்கள்

சித்திரைத் திருவிழா: பாதுகாப்பு பணியில் 5,000 மேற்பட்ட போலீஸாா்! ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

