ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சித்திரைத் திருவிழாவுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை! - மருத்துவா் பா.சரவணன்

News image

சித்திரைத் திருவிழா கொடியேற்றம் - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:07 pm

மதுரை சித்திரைத் திருவிழாவில் பொதுமக்களுக்குத் தேவையான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மதுரையில் உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஏப்.28) திருக்கல்யாண வைபவமும், தேரோட்டமும், வருகிற மே 1-ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகா் இறங்கும் வைபமும் நடைபெறவுள்ளன.

இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்வா். மதுரையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்கள், குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது போதுமான அளவில் காவல் துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மேலும், பொதுமக்களிடையே பிரசாரங்கள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். சித்திரைத் திருவிழா பொதுமக்களுக்கு பாதுகாப்பான திருவிழாவாக அமைய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.