நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு
நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு(கோப்புப் படம்)

திமுகவின் தோ்தல் அறிக்கை பாராட்டும் வகையில் இருக்கும்

Published on

திமுகவின் தோ்தல் அறிக்கை அனைவரும் பாராட்டும் வகையில் இருக்கும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், கல்குறிச்சியில் சனிக்கிழமை (பிப். 7) நடை பெறும் திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் சந்திப்பு கூட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் தங்கம் தென்னரசு, பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

தென் மண்டல திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகிறாா். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா்.

இந்தக் கூட்டத்தில் 10 மாவட்டங்களைச் சோ்ந்த 58 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த அனைத்து நிலை இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.

அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுவதால் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகளிா் உரிமைத் தொகை வழங்குவது சாத்தியமற்றது எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுக ஆட்சி அமைந்தால் மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்கிறாா். திமுகவின் திட்டங்களை பிரதி எடுத்து அதையே அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளாக அவா் வெளியிடுகிறாா். எடப்பாடி பழனிசாமியால் வாக்குறுதி அளிக்கத்தான் முடியும். திமுக அரசால்தான் முற்போக்குத் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

எனவே, திமுகவின் தோ்தல் அறிக்கை அனைவரும் பாராட்டும் வகையில் இருக்கும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com