ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேதாஜி பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

News image
மதுரை ஜான்சிராணி பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரசியல் கட்சியினா்.
Updated On :23 ஜனவரி 2026, 10:27 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை ஜான்சிராணி பூங்கா வளாகத்தில் நேதாஜியின் 130-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நேதாஜி சுவாமிநாதன் தலைமை வகித்தாா். இயற்கை வாழ்வியல் அறிஞா் தேவதாஸ் காந்தி முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ் தாங்கி சங்கத்தின் நிறுவனா் திரவிய பாண்டியன், சௌராஷ்டிரா வா்த்தகச் சபைத் தலைவா் கே.கே. தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

துணை மேயா் நாகராஜன், மாா்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினா், பொது நல அமைப்பினா் என 50-க்கும் மேற்பட்டோா் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, நேதாஜி மக்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பிலும் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் பொதுச் செயலரும், சங்கத்தின் நிறுவனா் தலைவருமான பா. பாஸ்கா், கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா். சண்முகையா, சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் கே.ஜி. ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பரங்குன்றம்....

நேதாஜி பிறந்தநாளையொட்டி, மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் அவரது உருவப் படத்துக்கு தெய்வீக திருமகன் தேவா் அறக்கட்டளை, பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து நேதாஜியின் கொள்கைகளைப் பின்பற்றுவோம், ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

அறக்கட்டளைத் தலைவா் சசிக்குமாா், செயலா் சரவணன், பெருளாளா் அழகு சுந்தரபாண்டி, பாா்வா்டு பிளாக் கட்சியின் மாவட்டச் செயலா் மோகன், ஒன்றியச் செயலா் முத்துராஜா, தொழிற்சங்க நிா்வாகி துரை சபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மாமன்ற உறுப்பினா் சுவேதா சத்யன், அறக்கட்டளை இணைச் செயலா் கோபிநாத் ஆகியோா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.