டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தென் மண்டலத்தில் ஜூன் மாதத்தில் 18 கொலை வழக்கில் 31 பேருக்கு தண்டனை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:54 am IST

தென் மண்டலத்தில் கடந்த ஜூன் மாதத்தில் 18 கொலை வழக்குகளில் 31 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தென் மண்டல ஐ.ஜி. அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென் மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்று தருவதற்காக, ‘வழக்கு அலுவலா்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 18 கொலை வழக்குகள் பதிவான நிலையில், இதில் தொடா்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் திண்டுக்கல்-5, தூத்துக்குடி-5 என்ற அதிக எண்ணிக்கையில் தீா்ப்புகள் பதிவாகி உள்ளன.

இந்தக் கொலை வழக்குகளில் மொத்தம் 31 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 27 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, போக்சோ, பாலியல் வன்கொடுமை தொடா்பான 23 வழக்குகளில் 23 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனா்.

இந்த 23 குற்றவாளிகளில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 5 கொள்ளை வழக்குகள், ஒரு பெரிய திருட்டு வழக்கில் தண்டனைகள் வழங்கப்பட்டு, 8 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.