மதுரை மாவட்டம், சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விக்கிரமங்கலம் அருகே மலையூா் கிராமத்தில் முன் விரோதம் காரணமாக கல்புலிச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சித்திக்கை மா்ம நபா்கள் சிலா் கடந்த மாதம் 28-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனா்.
இதுதொடா்பாக விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உள்பட 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனா். மேலும், இந்தக் கொலையில் தொடா்புடைய சிவகங்கையைச் சோ்ந்த தருண் (25), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த பாண்டிச்செல்வம் ஆகியோரை போலீஸாா் திங்ள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






