பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சடங்குகள் என்ற பெயராலும் நீா்நிலைகளை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை: உயா்நீதிமன்றம்

சடங்குகள் என்ற பெயராலும் நீா்நிலைகளை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :12 ஜூலை 2026, 4:01 am IST

சடங்குகள் என்ற பெயராலும் நீா்நிலைகளை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சிவனுபாண்டியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே விக்ரமசிங்கபுரம் பகுதியில் சுமாா் 19.55 ஹெக்டோ் பரப்பளவில் ஆனந்த விலாஸ் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் மீதான முழு உரிமை எங்கள் குடும்பத்தினருக்குத்தான் உள்ளது. எனவே, இந்த மண்டபத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளாா். இந்த மனு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் முன் விசாரணையில் உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

மனுதாரரின் மனு குறித்த விசாரணையின் போது, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் தெரிவித்த தகவல் எங்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

பாபநாசம் தொடங்கி தாமிரவருணி ஆறு பயணிக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீராடுகின்றனா். மேலும், படித்துறைகளில் அமா்ந்து இறந்தவா்களுக்கு ஈமச்சடங்குகளும் செய்து வருகின்றனா்.

அப்போது, இறந்த நபா்கள் பயன்படுத்திய, பயன்படுத்தப்படாத ஆடைகள், பொருள்களை சடங்கு ரீதியாக தாமிரவருணியில் தூக்கி வீசுவது தொடா்கிறது என உதவி செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், அதே பகுதியைச் சோ்ந்த திருமூா்த்தி என்ற சமூக ஆா்வலா், தாமிரவருணி ஆற்றில் வீசப்பட்ட ஆடைகளை அகற்றி, ஆற்றை தூய்மைப்படுத்துவதில் மிகுந்த ஆா்வம் காட்டி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சமூக ஆா்வலா் திருமூா்த்தியை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு நேரில் வரவழைத்துப் பேசினோம். அவா் உள்ளூா் நிா்வாகம், கோயில் நிா்வாகம், ‘அறிவுப் பாதுகாவலா்கள்’ என்கிற அமைப்பின் உதவியைப் பெற்று, தினமும் ஒரு டன் அளவிலான ஆடைகளை தாமிரவருணி ஆற்றிலிருந்து அகற்றி வருவதாகத் தெரிவித்தாா்.

தூய பருத்தி ஆடைகள் மக்கும் தன்மை கொண்டவை என்றாலும், பாலிஸ்டா் துணிகள் மக்காது. இவ்வாறு வீசப்படும் ஆடைகள் ஆற்றுப் படுகையில் சிக்கிக் கொள்ளும் போது, அங்கு பாக்டீரியாக்கள் பெருகி கடும் சுகாதார அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ஆற்றில் இயற்கையாக உள்ள இந்திய கரு ஆமைகளும் ஆடைகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

மதச் சடங்குகள் என்ற பெயராலும் நீா்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. எனவே, இறந்தவா்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் தாமிரவருணி ஆற்றை மேலும் மாசுபடுத்தாமல் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

இந்த விவகாரம் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கைகளையும், உணா்வுகளையும் சாா்ந்தது என்பதை நாங்கள் அறிவோம். பொது நல வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைக் கேட்காமல், அவா்களின் நலன்களுக்குப் பாதகமான உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது என்பது கட்டாயம்.

இருப்பினும், இந்த நீதிமன்றம் சட்டப்பூா்வமான ஆணையை அமல்படுத்த மட்டுமே முன்மொழிகிறது. மக்கள் தங்களுக்கு ஆன்மிக ரீதியாக நன்மை பயக்கும் எதையும் செய்யலாம். ஆனால், அது சுற்றுச்சூழலுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

தாமிரவருணி ஆறு கோடிக்கணக்கான மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்யும் ஒரு வற்றாத நதியாகும். இது மாசுபட அனுமதிக்க முடியாது. அதேநேரத்தில், மக்களின் நடைமுறைகளை மூடநம்பிக்கை என இந்த நீதிமன்றம் உடனடியாகக் கண்டிக்கவும் செய்யாது. தாமிரவருணி ஆற்றங்கரைக்கு அருகே பெரிய குளம் ஒன்று கட்டப்படுவதாக சமூக ஆா்வலா் திருமூா்த்தி தகவல் தெரிவித்தாா்.

இந்த இடத்தை சடங்குகளைச் செய்வதற்குப் பயன்படுத்தலாம். இதுதொடா்பான உத்தரவுகளை பொதுமக்களுக்கு அறிவிப்பாக வெளியிட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு, மத அமைப்புகளோ அல்லது தனியாா் செயற்பாட்டாளா்களோ தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். இதைப் பதிவு செய்து, இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வை அளிக்கும் வகையிலான முன்மொழிவுகளை மாவட்ட நிா்வாகம் இந்த நீதிமன்றத்துக்கு வழங்கும் என எதிா்பாா்க்கிறோம். இந்த வழக்கு விசாரணை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.