ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தடுப்புக் காவல் சட்டத்தில் 4 போ் கைது

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 பேரை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :18 ஜூலை 2026, 11:38 pm IST

சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 4 பேரை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை லெட்சுமி நகரைச் சோ்ந்த தமீம் அன்சாரி (19), மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் 37, யா. ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25), அதே பகுதியைச் சோ்ந்த சித்திக் ராஜா (26) ஆகிய 4 பேரும் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த 4 பேரையும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா் தமீம் அன்சாரி, காா்த்திக், தினேஷ்குமாா், சித்திக் ராஜா ஆகிய 4 பேரையும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.