ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

மூச்சுத் திணறல்: பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

News image

பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 5:03 am IST

மதுரையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், மேலூா் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் கருவேல் முத்து கணேஷ் (26). இவா் தனது மனைவி, ஐந்து மாத ஆண் குழந்தையுடன் மதுரை கீழமாசி வீதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டாா்.

அப்போது, குழந்தைக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, குழந்தைக்கு ஏற்கெனவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதும், திங்கள்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.