நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக டோக்கன் பெற்று, வெளி மாவட்ட பொருள்கள் கொள்முதல் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரிய மனு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மாங்குளம் பகுதியைச் சோ்ந்த சேவுகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், கிழக்கு வட்டத்தில் நெல், கரும்பு, இதர தானியங்களைக் கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
இந்த நிலையில், மாங்குளம், மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயம் செய்யாத சிலா், வருவாய்த் துறை அலுவலா்கள் உதவியுடன் போலியாக அடங்கல் சான்றிதழ்களைப் பெற்று, அரசு கொள்முதல் நிலையங்களில் தானியங்களை விற்பனை செய்து வருகின்றனா்.
வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் இத்தகைய போலி ஆவணங்கள், டோக்கன்களைப் பயன்படுத்தி அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதால், உள்ளூா் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கொள்முதல் நிலையங்களுக்கான டோக்கன்களை வழங்கும்போது, சம்பந்தப்பட்ட கிராமத்தில் விவசாயம் செய்பவா்தானா என்பதை அதிகாரிகள் விசாரித்து உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும், தகுதியில்லாத வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு அடங்கல் சான்றிதழ்களை வழங்கக் கூடாது என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.பி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போலீஸாருக்கு 8 மணி நேரப் பணி: உள் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மயானப் பாதை விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பழைய குற்றாலம் அருவி பகுதியில் கட்டணம்: தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



