வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு
உசிலம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.


மதுரை: உசிலம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், உத்தப்பநாயக்கனூா் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (51). இவரும், இவரது உறவினருமான ராஜதுரை (31) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டியிலிருந்து சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த வேன் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணேசன், ராஜதுரை ஆகிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா், உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்பநாயக்கனூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கணேசன், ராஜதுரை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...