நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்

News image
Updated On :19 மார்ச் 2026, 10:49 pm

மதுரையில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான படிவங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 45 சதவீதம் மாற்றுத் திறன் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகள் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி அலுவலா்கள், வாக்குச் சாவடி கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, ‘12-டி’ படிவத்தை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து, வாக்காளா்களிடமிருந்து தோ்தல் நாளுக்கு முன் நிறைவு செய்யப்பட்ட தபால் வாக்கு படிவங்களை திரும்பப் பெறுவது வழக்கம்.

இந்த வகையில், மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட 55-ஆவது வாா்டு தலைவிரிச்சான் வீதியில் வசித்து வரும் 106 வயதுடைய முத்துகிருஷ்ணன், அவரது மனைவி ஸ்ரீரங்கம் (96) ஆகியோருக்கு தபால் வாக்குக்கான படிவத்தை மதுரை மத்திய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலா்கள் வழங்கினா்.