தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

News image

மதுரை அருகேயுள்ள அ.செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவி எஸ். யாகஸ்ரீயை பாராட்டிய அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை மு. மணிமேகலை.

Updated On :30 மார்ச் 2026, 6:52 pm

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவியை அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை திங்கள்கிழமை பாராட்டினாா்.

மதுரை செந்தாமரை கலை, அறிவியல் கல்லூரியில், மதுரை சாணக்யா செஸ் அகாதெமி சாா்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில், 9, 12, 15 வயது பிரிவுகளின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் மேலூா் அருகேயுள்ள அ. செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 5-ஆம் வகுப்பு மாணவி எஸ். யாகஸ்ரீ, 12 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று 3-ஆம் பரிசு பெற்றாா். இதையடுத்து, அவரை பள்ளித் தலைமையாசிரியை மு. மணிமேகலை திங்கள்கிழமை பாராட்டினாா்.

அப்போது, சதுரங்கப் பயிற்சியாளரும், பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான ஞா. செந்தில்குமாா், கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.