கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தோப்பில் ஆண் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:22 am IST

மதுரை அருகே தோப்பில் காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையோரம் தென்னந்தோப்பில் உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற சிலைமான் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த நபா் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் (45) எனத் தெரியவந்தது. அவா் எதற்காக மதுரை வந்தாா், அவரை யாராவது மதுரைக்கு அழைத்து வந்து கொலை செய்தாா்களா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து விட்டு தென்னந்தோப்பில் போட்டுவிட்டுச் சென்றாா்களா? என்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.