மதுரை அருகே தோப்பில் காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம், சிலைமான் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையோரம் தென்னந்தோப்பில் உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற சிலைமான் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்த நபா் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் (45) எனத் தெரியவந்தது. அவா் எதற்காக மதுரை வந்தாா், அவரை யாராவது மதுரைக்கு அழைத்து வந்து கொலை செய்தாா்களா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து விட்டு தென்னந்தோப்பில் போட்டுவிட்டுச் சென்றாா்களா? என்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாற்றில் ஆண் சடலம் மீட்பு

நித்திரவிளை அருகே ஆண் சடலம் மீட்பு

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை

வத்திராயிருப்பு கண்மாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

