ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அண்ணா பேருந்து நிலையத்தில் மழைநீா், குப்பைகள் தேக்கம்

News image

மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீா், குப்பைகள்.

Updated On :11 மே 2026, 2:30 am IST

மதுரை, மே 10: மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீா், குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை மாநகரின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக அண்ணா பேருந்து நிலையம் விளங்குகிறது. கடந்த சில நாள்களாக மதுரையில் பெய்து வரும் கோடை மழையால், இந்தப் பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் தண்ணீா் தேங்கியது. மேலும், பேருந்து நிலையப் பகுதிகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை ஒட்டியே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து பரவும் துா்நாற்றத்தால் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவா்களது உதவியாளா்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனா். மேலும், தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் அண்ணா பேருந்து நிலையத்தை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீா், குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.