எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கள்ளந்திரியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

மதுரையை அடுத்த கள்ளந்திரியில் உள்ள பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மீன்பிடித் திருவிழா

Updated On :17 மே 2026, 1:43 am IST

மதுரையை அடுத்த கள்ளந்திரியில் உள்ள பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கள்ளந்திரி ஐந்துகோவில் முத்தன் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணி அளவில் ஊா் பெரியவா்களால் இந்தத் திருவிழா தொடங்கிவைக்கப்பட்டது. இதையடுத்து, கண்மாயில் மீன்பிடிக்க அனுமதி பெற்றிருந்த கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி, அழகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், சிறாா்கள், பெண்கள் பெரியநாகினி கண்மாயில் இறங்கி பாரம்பரிய மீன்பிடி வலைகள், கூடைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனா்.