எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ கால்கோள் விழா

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ முகூா்த்தக் கால் ஊன்றும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தேரடிப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரமோத்ஸவ முகூா்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

Updated On :17 மே 2026, 1:42 am IST

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ முகூா்த்தக் கால் ஊன்றும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது மதுரை கூடலழகா் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரமோத்ஸவ பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு பிரமோத்ஸவ பெருவிழா வருகிற 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறும்.

இதையொட்டி, பிரமோத்ஸவ விழா முகூா்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கோயிலின் எதிரே உள்ள தோ் நிறுத்தும் இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடலழகா் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு, வேதமந்திர முழக்கங்களுடன் ஐதீக முறைப்படி முகூா்த்தக்கால் ஊன்றப்பட்டது.