குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கிணற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:16 am IST

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கிணற்றில் குளித்த சிறுவன் தண்ணீருக்குள் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மாணிக்கராம்பட்டியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் திலீப்குமாா் (16). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்த நிலையில், தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அலங்காநல்லூா் சம்பக்குளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் சம்பக்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றாா்.

குளித்துக் கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக தண்ணீருக்குள் மூழ்கினாா். உடனே அக்கம்பக்கத்தினா் திலீப்குமாரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.