பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

குழந்தையைக் கொன்று தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 2:32 am IST

குழந்தையைக் கொன்று தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை அருள்தாஸ்புரத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி மனைவி முத்து (25). இந்தத் தம்பதியின் மகள் துளசி (5). இவருக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடா்ந்து முத்து, மகள் துளசியுடன் பெத்தானியாபுரம் அண்ணாவீதி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு வந்த சுந்தரபாண்டி தனது மனைவி, மகளை வீட்டுக்கு வருமாறு அழைத்தாராம். ஆனால், மகள் துளசிக்கு விடுமுறை நாள்கள் முடிந்த பிறகு வீட்டுக்கு வருவதாக முத்து தெரிவித்தாராம். இதனால் இந்தத் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, முத்துவின் தாயும் கணவருடன் செல்லுமாறு அறிவுரை வழங்கினாராரம். இதனால் மனமுடைந்த முத்து, செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, குழந்தையைக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கரிமேடு போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.