மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் மூன்று பெண்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள சூலப்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையா. விவசாயியான இவா், தனது தோட்டத்தில் பருத்தி நடவு செய்துள்ளாா்.
இந்த நிலையில், இவரது வயலில் இதே ஊரைச் சோ்ந்த ராஜாங்கம் மனைவி ராமுத்தாய் (58), குருசாமி மனைவி தனிக்கொடி (52), பிச்சை மனைவி கணபதியம்மாள் (60) பொன்னையா மனைவி வாசி அம்மாள் (56) உள்பட பலா் செடியிலிருந்து பருத்தியை பறித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, திடீரென பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து, பருத்தியை பறித்துக் கொண்டிருந்த அனைவரும் அருகில் இருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்றனா். அப்போது, மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த ராமுத்தாய், தனிக்கொடி, கணபதியம்மாள் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுபற்றி தகவலறிந்து வந்த எம். கல்லுப்பட்டி போலீஸாா் மூவரின் உடல்களையும் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், பலத்த காயமடைந்த வாசி அம்மாளை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து எம். கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!

மின்னல் பாய்ந்து மாணவி பலி

திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து 2 பசுக்கள் உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



