சி.என்.சி. தொழில்நுட்பம் குறித்து 5 நாள்கள் நடைபெறும் இலவச பயிற்சி முகாம் ஜன.7 முதல் 11 வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்துடன் இணைந்து இரத்தினவேல் சுப்பிரமணியம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இலவசமாக நடைபெறும் இப்பயிற்சியில் பத்தாம் வகுப்பு தேறிய, தவறிய மாணவர்களும், தொழில் நுட்ப பயிற்சி முடித்தவர்களும் பங்கேற்கலாம்.
மேலும் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தங்கள் பெயர்களை பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் வி.சீனிவாசராமன், எஸ்.சிவக்குமார் ஆகியோரை 9842249335 மற்றும் 9943610734 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.