அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஒட்டன்சத்திரத்தில் கந்து வட்டி தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

ஒட்டன்சத்திரத்தில் கந்து வட்டி தடுப்புச் சட்டத்தில்  2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:15 am

DIN

ஒட்டன்சத்திரத்தில் கந்து வட்டி தடுப்புச் சட்டத்தில்  2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
   ஒட்டன்சத்திரம் கருவூல காலனியைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி (45). இவர் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் கமிஷன் கடை வைத்துள்ளார். இவர் தொழில் செய்வதற்காக தனது வீடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடம் ரூ.4.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தையும், வீட்டையும் ஈஸ்வரன், சின்னையகவுண்டன்வலசைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கு மாற்றி கொடுத்துள்ளார்.
அவர்,  மார்க்கம்பட்டி அடுத்துள்ள துறையூரைச் சேர்ந்த கருப்புச்சாமி (66) மற்றும் காவேரியம்மாபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (43) ஆகியோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் நிலத்தின் உரிமையாளர் கருவூலக் காலனியைச் சேர்ந்த கருப்புச்சாமிக்கு இவர்கள்,  ரூ.23 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளனர். அதற்காக அவர், இவர்களுக்கு மாதம் தோறும் வட்டியாக ரூ.27 ஆயிரம் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
 இந்நிலையில் இவரை கடந்த சில மாதங்களாக கூடுதலாக மாதந்தோறும் வட்டி ரூ.35 ஆயிரம் கேட்டு அவர்கள் மிரட்டினராம். அவ்வாறு தரவில்லை என்றால் நிலம் மற்றும் வீட்டை தங்களது பெயரில் எழுதித் தர கூறினராம். இதுகுறித்து கருவூலக் காலனியைச் சேர்ந்த கருப்புச்சாமி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் துறையூர் கருப்புச்சாமி, கிருஷ்ணன்,  வேலுச்சாமி, ஈஸ்வரன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் துறையூர் கருப்புச்சாமி மற்றும் கிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.