திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கிய 6 பேரை, மதுவிலக்கு பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மதுவிலக்கு பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுகாசினி தலைமையிலான போலீஸார், திண்டுக்கல், வடமதுரை, எரியோடு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை, பெட்டிக் கடைகளிலும், அனுமதியில்லாத பார்களிலும் வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து 550 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், மதுபாட்டில்களை பதுக்கியதாக திண்டுக்கல் ஆர்எம். காலனியைச் சேர்ந்த கருப்பையா (38), எரியோடு ஜனார்தனன் (36), வடமதுரையைச் சேர்ந்த பிச்சைமுத்து (40), கணேசன் (37), பாண்டித்துரை (30), மணி (43) ஆகிய 6 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.21ஆயிரம் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!

தலைவரான தனுஷ்! குழப்பத்தில் ரசிகர்கள்!
பஞ்சாப் வினாத்தாள் கசிவு! அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி பாஜக எம்பிக்கள் போராட்டம்!

பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்களால் பரபரப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


