நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

கல்லூரியில் தன்னம்பிக்கை தலைமைப் பண்பு பயிற்சி முகாம்

பழனியை அடுத்த தாளையூத்தில் உள்ள சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை

Updated On :24 ஜனவரி 2019, 12:57 am IST

பழனியை அடுத்த தாளையூத்தில் உள்ள சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் தலைமைப்பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. 
கல்லூரி நிர்வாகம் மற்றும் நெய்க்காரபட்டி அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் சுப்ரமணி தலைமை வகித்தார். தாளாளர் ஜெயலட்சுமி சுப்ரமணி முன்னிலை வகித்தார். 
நிகழ்ச்சியில் பெங்களூருவை சேர்ந்த மேஜிக் நிபுணரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான ராஜேஷ் பெர்னான்டோ சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது, மாணவ, மாணவியர் கல்வி பயிலும் போது கவனம் எங்கும் சிதறாமல் கல்வியை கற்பதில் இருக்க வேண்டும், தேர்வின் போது தேவையற்ற சந்தேகங்களை அகற்றி தேர்வை நல்லமுறையில் எதிர்கொள்ள வேண்டும் என்றார். 
மேலும் பல்வேறு "மேஜிக்' செய்து காட்டியதோடு மாணவர்களுக்குப்  பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் தேவகி வரவேற்றுப்பேசினார். 
அரிமா சங்க மாவட்டத் தலைவர் மயில்சாமி, கந்தசாமி, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.