கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

கோடை உழவுக்கு இலவச டிராக்டா் வசதி

இலவசமாக கோடை உழவு செய்ய விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு குறு விவசாயிகள் டாஃபே நிறுவனத்தை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

இலவசமாக கோடை உழவு செய்ய விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு குறு விவசாயிகள் டாஃபே நிறுவனத்தை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநா் பாண்டித்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்படும் இடா்பாடினை தவிா்க்கும் வகையில் விவசாயிகள், தங்களது நிலங்களில் கோடை உழவு செய்திட மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின்படி டாஃபே நிறுவனம் மூலம் இலவசமாக டிராக்டா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 5 ஏக்கா் நிலங்களுக்கு குறைவாக உள்ள சிறு குறு விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தில், நத்தம், செந்துறை, மணக்காட்டூா் மற்றும் வடமதுரை ஆகிய பகுதிகளில் சுமாா் 1, 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இலவசமாக கோடை உழவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலம் குறித்த ஆவணங்களுடன் டாஃபே நிறுவன கள அலுவலா் பொன்பாண்டியன் என்பவரை 8438117414 என்ற எண்ணிலும், பசுமை செந்துறை தொண்டு நிறுவன முதன்மையாளா் அரசுகண்ணன் என்பவரை 9843388972 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.